Scripture வேதவசனம்: ரோமர் 15:1 அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.
2. நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.
3. கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்...
2. நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.
3. கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்...
Observation கவனித்தல்: தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த ஆசீர்வாதம் (ஆதி.12:1-3) பூமியில் உள்ள வம்சங்கள் எல்லாம் ஆபிரகாமுக்குள் ஆசீர்வதிக்கப்பட காரணமாயிற்று. தேவன் நமக்கு தரும் வல்லமைகள் அவை மிகவும் அதிக பிரயோஜனமாக இருக்கும்படியே தரப்படுகிறது.
Application பயன்பாடு: என் பலத்தை எனக்கு நன்மை செய்கிற ஆசீர்வாதமாக கருதுவது தவறு ஆகும். நான் இயேசுவைப் போல மாற விரும்பினால், என் வல்லமையை மற்றவர்களின் நன்மைக்காக பயன்படுத்த வேண்டும். நான் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி தேவன் என்னை ஆசீர்வதித்திருக்கிறார்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, இன்று நீர் என் வாழ்வில் வைத்திருக்கும் நன்மைகளை நான் மற்றவர்களுக்காக பயன்படுத்துபவனாக வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.
No comments:
Post a Comment