Scripture வேதவசனம்:
2 கொரிந்தியர் 5: 18 All this is from God, who reconciled us to himself
through Christ and gave us the ministry of reconciliation:
Observation கவனிதல்: தேவன் நம் மூலமாகச் செய்ய விரும்புகிறவைகளையே நம்மில் செய்கிறார். நாம் அவரிடம் இரக்கம் பெறும்படி நம்மை அழைத்து, நம் மூலமாக மற்றவர்களும் அந்த இரக்கததைப் பெறும்படி நாம் அவர்களைக் கொண்டு வரவேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
Application பயன்பாடு: தேவன் என் பாவங்களுக்காக விலைக்கிரயத்தைச் செலுத்தி, என்னை மன்னித்து தன்னிடமாக என்னை இழுத்துக் கொண்டார். இந்த ஊழியத்தில் என்னை அவர் இப்பொழுது இணைத்துக் கொள்ள விரும்புகிறார். என்னுடனான உறவு முறிந்து போன நிலையில் உள்ளவர்களுக்கு நான் தயை செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
மற்றவர்கள் தேவனுடன் ஒப்புரவாகும் படி நான் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம் தயைக்காக நன்றி. நான் மற்றவர்களுக்கும் தாமதமின்றி தயை செய்யவும், அவர்களுக்கு உம் தயையைப் பெறுவதற்கான வழியைக் காண்பிக்கவும் எனக்கு உதவும். ஆமென்.
No comments:
Post a Comment