Thursday, February 14, 2013

அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை

Scripture வேதவசனம்:  சங்கீதம் 24:1  1. பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.
2. அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்.

Observation கவனித்தல்:  இந்த உலகத்தைப் படைத்த ஆண்டவருக்கே அது சொந்தம். அவரே அதை உண்டாக்கினார். தேவன் உண்டாக்கியவைகளை பயன்படுத்துவதின் மூலம்மாக மட்டுமே மனிதனின் படைக்கும் திறன் வெளிப்படுத்த முடியும். தேவன் மட்டுமே ஒன்றுமில்லாமையில் இருந்து உண்டாக்கினார்.
 
Application பயன்பாடு:  தேவனே சிருஷ்டிகராக இருக்கிறபடியாலும், நான் உண்டாக்குகிறவைகள் எல்லாம் அவர் உண்டாகியவைகளில் இருந்தே உருவாக்குகிறபடியால்......
என் பாவங்களுக்காக மரிக்கும்படி தேவன் தம்முடைய குமாரனையே அனுப்புமளவுக்கு என்னை நேசிக்கிற படியால்....  
என் வாழ்க்கையை அவரை மகிமைப்படுத்துவதற்கு நான் அர்ப்பணித்திருக்கிறபடியால்....
நான் அவருடைய சித்தத்தைச் செய்துமுடிக்க எனக்கு தேவையானவைகளைச் செய்ய தேவன் எனக்கு உதவுவார் என எதிர்பார்ப்பது சரியானதே.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, நீர் அனைத்தையும் உண்டாக்கியவர் என்பதை நான் அறிந்திருக்கிறேன். நான் உம்மை நம்ப முடியும். ஆமென்.

No comments:

Post a Comment