Wednesday, July 27, 2011

தேவன் தரும் மகிழ்ச்சி

வாசிக்க: ஏசாயா 53-56; 2 பேதுரு 2

Scripture வேதவசனம்: ஏசாயா 56:7 நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.

Observation கவனித்தல்: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன். ஜெபவீடு மகிழ்ச்சியில் இடம் ஆகும். அது தேவன் தரும் மகிழ்ச்சியின் இடம் ஆகும். அங்கே நாம் ஐக்கியத்தின் மகிழ்ச்சியைப் பெறுகிறோம். அங்கே நாம் பங்கெடுத்துக் கொள்வதின் மகிழ்ச்சியைக் கண்டுகொள்கிறோம். மேலும் வெற்றியின் மகிழ்ச்சியையும் கண்டுகொள்கிறோம்.

"சகலருக்கும் ஜெபவீடு." இந்தப் பகுதியில் அனைவரும் தேவனுடைய வீட்டிற்கு ஜெபிக்க வரவேற்கப்படுகிறார்கள் என்று பொருள் கொள்ளலாம். எல்லாருக்காகவும் ஜெபங்களை ஏறெடுக்கிற ஒரு இடமாக இருக்கவேண்டும் என்றில்லை என்றாலும், இந்த வேதபகுதி தேவனை கனம் பண்ண விரும்பும் புறஜாதியாருக்குப் பொருந்துகிறது. அவரகள் வரவேற்கப்படுகிறார்கள். அவர்களுடைய ஜெபம் கேட்கப்படும்.

Application பயன்பாடு: சிலவேளைகளில் என்னுடைய ஜெபங்களை விட மற்றவர்களுடைய ஜெபங்கள் தேவன் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று நினைத்து அவர்கள் எனக்காக ஜெபிக்கவிரும்புகிறேன். எனக்காக மற்றவர்கள் ஜெபிப்பது நல்லது. ஆனால் தேவன் என் ஜெபங்களைக் கேட்க மாட்டார் என்பதினாலோ புரிந்து கொள்ள முடியாது என்பதினாலோ மற்றவர்கள் எனக்காக ஜெபிக்கக் கூடாது. ஜெபத்தின் தேவனை அணுகுவதற்கு எனக்கு எந்த தடையுமில்லை என்பதை நான் அறிந்து கொள்வது நல்லது.

Prayer ஜெபம்: கர்த்தாவே, ஜெபத்தில் உம்மை மகிமைப்படுத்தவேண்டும் என்ற என் விருப்பத்தை ஏற்றுக் கொள்கிறீர் என்பதி நீர் எனக்கு தெளிவுபடுத்தியதற்காக உமக்கு நன்றி. ஆமென்

No comments:

Post a Comment