Monday, July 25, 2011

SOAP 4 Today - மிகப் பெரிய சந்தோசம்

வாசிக்க: ஏசாயா 43-45; 1 பேதுரு 4.

Scripture வேதவசனம்: 1பேதுரு 4:10 அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.

Observation கவனித்தல்: அநேகர் வரங்களைப் பெறுவதில் சந்தோசமடைகிறார்கள். ஒருவர் சம்பாதிக்காத ஒன்றை போதுமான அளவுக்கு பரிசாக கொடுக்கவேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். பரிசுகளைப் பெறுவதில் உள்ள மகிழ்ச்சியில் மற்றுமொரு பகுதி என்ன்வெனில், அந்தப் பரிசு மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்தப்படுவது ஆகும். பரிசுகளைப் பெறும்போது கிடைக்கும் சந்தோசத்தை விட அந்தப் பரிசு மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக பயன்படும்போது அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது.

Application பயன்பாடு: ஓ, ட்ஏவனுடைய ஈவுகளை நான் சுயநலமாக பயன்படுத்தும்போது எவ்வளவாய் சந்தோசத்தை தவறவிடுகிறேன். பெறுவதில் உண்டாகும் மகிழ்ச்சியைக் காட்டிலும் மிக அதிக மகிழ்ச்சியை நாம் பெறவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். கொடுப்பதில் உண்டாகும் மகிழ்ச்சியை நான் அடைய அவர் விரும்புகிறார் - ஆகவே நான் மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடிய ஒன்றை எனக்குத் தருகிறார். ஆசீர்வாதமாக நான் இருக்கும்படி அவர் என்னை ஆசீர்வதிக்கிறார்.

Prayer ஜெபம் : கர்த்தாவே, மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படியான ஈவுகளை நீர் எனக்குத் தருகிறதற்காக உமக்கு நன்றி. உண்மையாகவே நான் ஆசீர்வதிக்கப்பட்டவன். ஆமென்.

No comments:

Post a Comment